Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.11,00,00,000 கோடி... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில், விவசாயிகளுக்கு 2020-21-ம் நிதியாண்டில் பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Crop loans to farmers 11,00,00,000 crore...tamilnadu Budget
Author
Tamil Nadu, First Published Feb 14, 2020, 11:36 AM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில், விவசாயிகளுக்கு 2020-21-ம் நிதியாண்டில் பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்;- 

* புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

* தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர் நிர்வாகத்திற்காக ரூ.1403 கோடி ஒதுக்கீடு

* கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  வேளாண் துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* போக்குவரத்து மானியங்களுக்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* பயிர்க்கடன் ரூ.11 ஆயிரம் கோடி வழங்கப்படும். 

* 1364 நீர்ப்பாசன பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios