Asianet News TamilAsianet News Tamil

தறிகெட்டு திரிந்த கல்லூரி மாணவன்...!! 10 ஆம் வகுப்பு மாணவியை அறையில் அடைத்து 6 நாள் அனுபவித்த கொடூரம்...!!

பள்ளி மாணவியை கடத்திச் சென்று ஆறு நாட்களாக அறையில் வைத்து கதற கதற கற்பழித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர் . அம் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . 

collage student arrest in pocso act for raping 10th standard girl at kumbakonam
Author
Chennai, First Published Feb 12, 2020, 4:53 PM IST

பள்ளி மாணவியை கடத்திச் சென்று ஆறு நாட்களாக அறையில் வைத்து கதற கதற கற்பழித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது . அம் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . அதைத் தடுக்க போலீசாரும் அரசும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை . நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது . இந்நிலையில்  கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கல்லூரி படிக்கும் மாணவன் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

collage student arrest in pocso act for raping 10th standard girl at kumbakonamசெய்துள்ளனர்

கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது )  பள்ளிக்கு சென்ற இவரை கடந்த 6 நாட்களாக காணவில்லை .  இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மகள் மாயமானது குறித்து திருப்பானந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் . இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர் , இதில் மாணவிக்கு நெருக்கமானவர்களைப் பிடித்து விசாரித்ததில் உண்மை கசிய ஆரம்பித்தது .  அணைக்கரை பகுதி விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாணவி அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .  இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் .  மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படியுங்க:- ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு..!! பாஜகவுக்கு முட்டுகொடுத்த அமைச்சர் கே. பாண்டியராஜன்...!!

collage student arrest in pocso act for raping 10th standard girl at kumbakonam 

பின்னர் தெடர்ந்து  மாணவியிடம் விசாரணை நடத்தியதில்,   கடந்த 6 நாட்களாக தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் மீது மாணவி புகார் கூறனார். பின்னர் அந்த மாணவனை பிடித்து விசாரித்ததில் கவிதா மீது தனக்கு ஏற்பட்ட மோகத்தால் ,  அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர் ஒப்புக்கொண்டார்.  மாணவன் தெரிவித்த தகவல்  போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது .  இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார் .  மாணவனின் பெற்றோர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios