இந்தியர்கள் சிங்கப்பூர் போகாதீங்க...!! கொரோனாவால் கட்டுப்பாடு போட்ட மத்திய அரசு ..!!
வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் மக்கள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது , இதுவரை இந்த வைரஸை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது .
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது . அதேபோல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருபவர்களும் கட்டாய பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ளது . துவரையில் கொரோனா வைரஸுக்கு சுமார் 2345 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 75 ஆயிரத்து 567 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் மக்கள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது , இதுவரை இந்த வைரஸை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது . சீனாவையும் தாண்டி ஜப்பான் சிங்கப்பூர் ஹாங்காங் தாய்லாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியா என இருபதுக்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது . இதற்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா , சீனா , ஜப்பான் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போராடி வருகின்றன. சீனாவுக்கு அடுத்ததாக ஜப்பானில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஈரானிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . ஈரானில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் .
அதேபோல் சிங்கப்பூரிலும் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . கடந்த 3 மாதமாக சீனாவில் வீரியமாக , இருந்த கொரோனா வைரஸ் தற்போது வீரியம் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , அது சிங்கப்பூரிலும் வேகமாக பரவி வருகிறது . ஆகவே இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது . நேபாளம் , இந்தோனேசியா , மலேசியா , வியட்நாமில் , இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும் என்றும், காய்ச்சல் , இருமல் , மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருந்தால் உடனே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .