யமுனை நதிக்கரையில் டூயட் பாட உள்ள ட்ரம்ப்...!! மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலில் காதல்...!!
அங்கு இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன . அதன்பிறகு ட்ரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார் , முன்னதாக அங்கு பாயும் யமுனை ஆற்றில் தண்ணீர் பாய்ச்சி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது ,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு ஆக்ரா மற்றும் அஹமதாபாத் நகரங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நண்பனும் அல்ல எதிரியும் அல்ல என்ற நிலை நீடித்து வருகிறது . இந்நிலையில் அமெரிக்காவை எப்போதும் தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுவருகிறது . பிரதமர் மோடியும் அதையே விரும்புகிறார் . கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் கைகோர்த்து தோழமையை வெளிப்படுத்தினார் மோடி . இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார் , குஜராத் மாநிலம் அகமதாபாத் வரவுள்ள அதிபர் டிரம்ப் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் . வரும் 24ஆம் தேதி மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதும் அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார் , அத்துடன் பிரதமர் மோடியுடன் 22 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை மார்க்கமாக பயணித்து அங்குள்ள மோட்டாரோ அரங்கத்தை சென்றடைகிறார் , இருவரும் பயணிக்கும் சாலையை விரிவாக்கம் செய்தல் , புதுப்பித்தல் , மற்றும் வர்ணம் பூசுதல் , ஓவியங்கள் வரைதல், என அழகுற செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன . முதலில் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு அதன் பிறகு உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கான மோட்டாரோ மைதானத்தை திறந்து வைக்கிறார் ட்ரம்ப்,
பின்னர் மோடியுடன் டெல்லி சென்று , அங்கு இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன . அதன்பிறகு ட்ரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார் , முன்னதாக அங்கு பாயும் யமுனை ஆற்றில் தண்ணீர் பாய்ச்சி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது , தொடர்ந்து 2 நாட்களுக்கு தண்ணீரைத் திறந்து விடுவதன் மூலம் நதி தூய்மையடைவதோடு அந்தப் பகுதியில் காற்று மாசு குறையும் என்று நம்பப்படுகிறது . அதேபோல் ஆக்சிஜனின் தரம் உயரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் வருவதையொட்டி ஆக்ரா மற்றும் டெல்லியிலும் அவர் பயணிக்கும் சாலைகளில் மேம்பாலங்கள் தூய்மைப்படுத்தும் பணி, அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது .