வென்டிலேட்டர் தட்டுப்பாடால் மூச்சு திணறும் அமெரிக்கா..!! ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு...!!
குறைந்தபட்சம் இந்த வைரஸ் சுமார் 223 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில்
சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,
அமெரிக்காவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது , அதே நேரத்தில் சுமார் 1500 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் என டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது . சீனாவை அடுத்து இத்தாலி ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பெரும் மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்நிலையில் வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா இத்தாலி போன்ற நாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி, கொரோனாவால் மிக மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்ற இடத்தை பெற்றுள்ளது.
இந்த வைரஸ் அமெரிக்காவில் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது . ஆரம்பத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்போது அதன் கொடூர முகத்தை காட்ட தொடங்கி உள்ளது . இதனால் அமெரிக்காவில் மக்கள் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டும் உயிர் பயத்தில் மூழ்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது . குறைந்தபட்சம் இந்த வைரஸ் சுமார் 223 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,
அமெரிக்காவில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் உடனடியாக ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும்படி அமெரிக்கா அதிபர் அந்நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் . ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால் இந்நிலையில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய கூடுதல் பணியாளர்களை அமர்த்தியுள்ளனர். அமெரிக்காவில் வென்டிலேட்டர் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதை உற்பத்தி செய்வதில் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.