தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சி திமுக...!! ஸ்டாலினை நக்கலடித்த அமைச்சர் செல்லூர் ராஜூ...!!
திமுகவால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது . திமுக பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க திட்டம்போடுகிறது அது முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள் .
திமுக எப்போதுமே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவை தாக்கி உள்ளார் . ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் மிதந்து வருகிறார் , அதிமுகவுக்கு முடிவுகட்ட யாரும் பிறக்கவில்லை , திமுக செய்த தவறை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் என செல்லூர் ராஜூ திட்டவட்டமாகக் கூறியுள்ளார் . மதுரை மாநகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆவர்.
கிராமங்கள்தோறும் ரேஷன் கடைகள் , மழைநீர் சேகரிப்பு திட்டம் , 69 சதவீத இட ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா . தற்போது அவர் வழியில் முதலமைச்சர் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது , சுமார் 34 லட்சத்து 55 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர். அதற்காக 4350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு விரைவில் பூமி பூஜை போட உள்ளது .
இந்த திட்டத்தால் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . இந்தியாவில் மிகச் சிறந்த ஆளுமை பெற்ற மாநிலம் தமிழகம் திமுக ஆட்சிக்காலத்தில் வக்பு வாரிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது , இதை இஸ்லாமியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் . திமுக இஸ்லாமியர்களை பகடைக்காயாக செயல்படுத்த பார்க்கிறது . பாராளுமன்றத் தேர்தல் என்பது வேறு சட்டமன்ற தேர்தல் என்பது வேறு, திமுகவால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது . திமுக பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க திட்டம்போடுகிறது அது முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள் . திமுக என்றுமே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படும் என அவர் கூறினார்.