Asianet News TamilAsianet News Tamil

சீமானால் எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது...!! குலுங்கி குலுங்கி அழும் விஜயலட்சுமி...!!

நான் பார்த்தவரையில் சீமானும் சீமானுடைய கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி . பலர் என்னிடம் சீக்கிரம் கமிஷனர் அலுவலகத்துக்குப் போய் பாதுகாப்புகேள்  என்று சொல்கிறார்கள் .  

actress vijayalakshmi talk about seeman and namtamilar party  cadres
Author
Chennai, First Published Feb 21, 2020, 2:35 PM IST

நான் யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு சீமான் குறித்து பேசவில்லை ,  நான் பார்த்தவரையில் சீமானும் சீமானுடைய கட்சியும் மிக மிக பயங்கரமான ஒரு கட்சியான என நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார் . சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட சீமான் குறித்த சில வீடியோக்கள் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .  இந்த வீடியோக்கள் குறித்து கருத்து தெரிவித்த சீமான் ,  ஒரு சாதாரண விஷயம் என கடந்துசென்றுவிட்டார்.   ஆனால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் அதன் உறுப்பினர்களும்  சீமானுக்கு எதிராக பேசிவரும் நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்தும் தாக்கியும் பேசி வருகின்றனர் . 

actress vijayalakshmi talk about seeman and namtamilar party  cadres

இதில் நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகியும்  பேச்சாளர்களில் ஒருவருமான காளியம்மாள் விஜயலட்சுமி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் மீண்டும்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி சீமானுக்கும்  தனக்கும் இடையே என்ன நடந்தது ஏன் இந்த வீடியோவை வெளியிட்டேன் என்று விளக்கம்  அளித்துள்ளார் . அதில்,  இந்தப் போராட்டம் எனக்கும் சீமானுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் . இப்போது கூட நான் சொல்கிறேன் என் பின்னால் எந்த கட்சியும் எந்த  அரசியல் தலைவர்களும் இல்லை ,  தமிழகத்தில் எத்தனையோ காட்சிகள் இருக்கிறது எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள் .  அதிமுகவில் ஜெயலலிதா அம்மா இருந்த வரை பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்,  அதேபோல் திமுக  , காங்கிரஸ் ,  பாஜக உள்ளிட்ட கட்சிகளில்  யாரும் உங்களுக்கு உயிர் பயம் தர மாட்டார்கள் .

 actress vijayalakshmi talk about seeman and namtamilar party  cadres

இதற்கு முன்பாக பேசிய சீமானின் வழக்கறிஞர் ,  அவங்களை எல்லாரையும் அன்பா பார்க்க சொல்லுங்க என பேசியிருந்தார் ,  முதலில் சீமானை எல்லோரையும் அன்பாகவும்,  மரியாதையாகவும் பேச சொல்லுங்கள் .  நான் பார்த்தவரையில் சீமானும் சீமானுடைய கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி . பலர் என்னிடம் சீக்கிரம் கமிஷனர் அலுவலகத்துக்குப் போய் பாதுகாப்புகேள்  என்று சொல்கிறார்கள் .   சீமானால் நான் பல துன்பங்களை அனுபவித்து உள்ளேன் ,  என்னை ஏன் கடவுள் இன்னும் உயிருடன் வைத்திருக்கிறார்  என்று பார்த்தால் நான் பட்டது போல வேறு எந்த பெண்ணும் படாமல் இருக்க வேண்டும் என்று தான்.  நான் ஒன்றை சொல்கிறேன்  யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு நான் இதைச் செய்யவில்லை ,  காளியம்மாள் என்னை தரக்குறைவாக பேசுகிறார் அவருக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பது யார் ,  சீமான் தானே.?  எனக்கு அச்சுறுத்தலை கொடு என்று சொல்வது சீமான் தானே.?  என விஜயலட்சுமி கேள்வியெழுப்பியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios