Asianet News TamilAsianet News Tamil

ராஜ்ய சபா தேர்தல்... போட்டியின்றி 6 பேர் தேர்வு... ராஜ்ய சபாவில் அதிகரிக்கும் திமுக உறுப்பினர்கள்!

திமுகவில் 3 பேர், அதிமுகவில் இருவர் தமாகவில் ஒருவர் என 6 பேர் எம்.பி.களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இந்தத் தேர்தல் மூலம் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆகக் குறைய உள்ளது. அதேபோல திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்க உள்ளது.
 

6 MP's elect as Rajya sabha from tamil nadu
Author
Chennai, First Published Mar 16, 2020, 10:31 PM IST

தமிழகத்தில் காலியாகும் ராஜ்ய சபா எம்.பி.கள் தேர்தலில் போட்டியிடும் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.6 MP's elect as Rajya sabha from tamil nadu
தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி.களின் பதவி ஏப்ரல் 2 அன்று காலியாகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. திமுக, அதிமுகவுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தாமக தலைவர் வாசன் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மேலும் 3 சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 6 MP's elect as Rajya sabha from tamil nadu
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இந்தப் பரிசீலனையில் 3 சுயேட்சைகளின் மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாததால், அவர்களுடைய மனு தள்ளுபடி ஆனது. எஞ்சிய 6 பேருடைய மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனவே, திமுகவில் 3 பேர், அதிமுகவில் இருவர் தமாகவில் ஒருவர் என 6 பேர் எம்.பி.களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தத் தேர்தல் மூலம் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆகக் குறைய உள்ளது. அதேபோல திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்க உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios