Asianet News TamilAsianet News Tamil

மழைக்கான அறிவிப்பு..! எந்த மாவட்டத்தில் பயங்கர மழை வரப்போகுது தெரியுமா..?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை உள்ளிட்ட தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain expected in another two days in tamilnadu
Author
Chennai, First Published Jan 19, 2020, 3:27 PM IST

மழைக்கான அறிவிப்பு..! எந்த மாவட்டத்தில் பயங்கர மழை வரப்போகுது தெரியுமா..?  

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை உள்ளிட்ட தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain expected in another two days in tamilnadu

கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் பாண்டவையாறு மற்றும் நீடாமங்கலம் என்ற பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் தூத்துக்குடி ராமநாதபுரம் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் பதிவாகி வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios