Asianet News TamilAsianet News Tamil

"ஒரே அட்டம்ப்டில்" குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா..? தாம்பத்யத்தில் ஒரு சின்ன மாற்றம்..!

how to give birth by fuirst attempt there is a small idea behind this
how to give birth by fuirst attempt there is a small idea behind this
Author
First Published Jun 25, 2018, 6:23 PM IST


ஒரே அட்டம்ப்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா..? தாம்பத்யத்தில் இது தான் முக்கியம்...!

வாழ்கையில் மிக முக்கியமான ஒன்று தாம்பத்யம். திருமணமான கணவர் மற்றும் மனைவி இவருக்குள்ளும் இருக்கும் ஒரு அழகிய காதலுக்கு மிக அழகான பரிசாக கிடைப்பது தான் குழந்தை..

ஒரு சிலருக்கு இந்த வாய்ப்புகள் இல்லாமல் போகிறதோ..அப்படி குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளை குறி வைக்கும் மருத்துவமனை முதல் சமூதாயத்தில் இந்த தம்பதிகள் சந்தித்து வரும் இன்னல்கள் வரை சொல்லி மாளாது...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திருமணம் முடிந்த உடன் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள  வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது இதுதான்...

பெண்ணின் கருமுட்டையானது, 28 நாட்களுகு ஒருமுறை புதுபிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும் தானே...அதாவது மாதவிடாய் சுழற்சி மூலம் தான் இதை அறிந்துக்கொள்ள முடியும்...

how to give birth by fuirst attempt there is a small idea behind this

மாதவிடாய் நேரம்:

மாதவிடாய் தொடங்கிய ஐந்து  நாட்கள் கழித்து, அதாவது ஆறாவது நாள் முதல் பத்தாவது நாள் வரை இந்த ஐந்து நாட்களில் மட்டுமே கருமுட்டையானது திறந்திருக்கும்.

இந்த சமயத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது குழந்தை பேறு கிடைக்க அதிக வாய்ப்பாக அமையும்.

how to give birth by fuirst attempt there is a small idea behind this

ஏனென்றால், இந்த ஐந்து நாட்களுக்க பிறகு, வரும் நாட்களில் அடுத்த சுழற்சிக்கு தயாராகி விடுகிறது பெண்ணின் கருப்பை.

எனவே இந்த சமயத்தை தம்பதிகள் சரியாக பயன்படுத்திக் கொள்வது ஆக சிறந்தது.

இதே போன்று, எந்தெந்த கிழமைகளில் எந்த நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வரைமுறை உள்ளது....

அதாவது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் கூட, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளில், காமத்துப்பாலில் இல்லற வாழ்க்கை குறித்து மிக அருமையாக தெரிவித்து இருப்பார்

how to give birth by fuirst attempt there is a small idea behind this

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, எதுவுமே அளவோடு தான் இருக்க வேண்டும்... தாம்பத்யம் கூட பத்தியம் என்ற வார்த்தைக்கு ஏற்ப, அளவோடு முறையாக மேற்கொண்டால், தாம்பத்யம் சிறப்பது மட்டுமல்லாமல், இல்லறம் சிறப்பாக நடத்த முடியும்...

எந்தெந்த நேரத்தில் தாம்பத்யம் வைத்துக் கொண்டால் நல்லது  தெரியுமா..?

இரவு பொழுதில் மட்டும்..!

திங்கட்கிழமை :

இரவு 10 மணி முதல் 11 மணி வரை

1 மணி முதல் 3 மணி வரை

செவ்வாய் கிழமை

இரவு 10 மணி முதல் 1 மணி வரை

புதன்கிழமை :

இரவு 8 மணி முதல் 10 மணி வரை

11 மணி முதல்  12 மணி வரை

வியாழகிழமை

இரவு 11 மணி முதல் 2 மணி வரை

வெள்ளிக்கிழமை

இரவு 8 மணி முதல் 11 மணி வரை

சனிக்கிழமை

இரவு 9 மணி முதல் 10 மணி வரை

12 மணி முதல் 2 மணி வரை

ஞாயிற்றுக்கிழமை

இரவு 9 மணி முதல் 12 மணி வரை .

மேற்குறிப்பிட்ட கிழமைகளில், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் மேலும் சிறந்ததாக இருக்கும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios