கொரோனா.. திடீர் ஊரடங்கு..பசி,பட்டினிக்கு பயந்து ஊருக்கு புறப்பட்ட அப்பாவிகள்.. 22பேர் உயிரிழந்த பரிதாபம்..!!
ஊரடங்கை முன்னிட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்பும் வழியில் 5 குழந்தைகள் உள்பட 22 பேர் விபத்து மற்றும் மாரடைப்புகளால் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சி மோடி அரசை வன்மையாக கண்டித்துள்ளார்.
T.Balamurukan
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் ஊரடங்கை முன்னிட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்பும் வழியில் 5 குழந்தைகள் உள்பட 22 பேர் விபத்து மற்றும் மாரடைப்புகளால் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சி மோடி அரசை வன்மையாக கண்டித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தினக்கூலிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாததால் வேறுமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த கூட்டத்தைக்கண்டு நாடே பதறிப்போய் இருக்கிறது.
டெல்லி, அரியானா, நொய்டா, காசியாபாத் ஆகிய பகுதிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர். கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
தொழிலாளர்கள் பலர் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மனைவி, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கால்நடையாகவே நடந்து டெல்லியை விட்டு சுமார் 500 கிலோமீட்டர் தூரம் உயிர் பிழைத்தால் போதும் என்று கால்நடையாகவே நடக்க துணிந்து வெளியேறினர்.
எல்லையைத் தாண்டிய மக்கள், காசியாபாத்தில் உள்ள லால் குவான் வரை நடந்து வருவதாகக் கூறினர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்திருந்தனர், மேலும் பலர் கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பாக முகத்தில் கைக்குட்டைகளை கட்டியிருந்தனர்.புறநகர்ப் பகுதியான காசியாபாத்துக்கு வந்து அங்கிருந்து தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்திப் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டனர்.
மும்பை, ஹைதராபாத் மற்றும் ஏழைகள் தங்கள் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்லும் பிற பெரிய நகரங்களிலும் இதேபோன்ற காட்சிகள் காணப்படுகின்றன, இது போன்ற பெரிய குழுக்களுக்கு சமூக விலகல் பற்றிய கருத்து இல்லாததால் கொடிய கொரோனா வைரஸின் சமூகம் தொற்றாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் நெடுஞ்சாலை அருகே வெளி ரிங் சாலையில் லாரி மோதியதில் 5 பேர் பலியாகினர்.. இந்த வேன் தெலுங்கானாவின் சூர்யாபேட்டையில் இருந்து கர்நாடகாவின் ரைச்சூர் வரை 30 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது.
மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் நடந்த மற்றொரு விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் டெம்போ மோதியதில் பலத்த காயமடைந்தனர். இந்த குழுவும் மராட்டியத்தில் இருந்து குஜராத் வழியாக தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் குஜராத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை, எனவே, அவர்கள் மராட்டியத்துற்கு திரும்பினர் அப்போது விபத்து ஏற்பட்டது.ஊரடங்கை முன்னிட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்பும் வழியில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் விபத்து மற்றும் மாரடைப்புகளால் பலியாகி உள்ளனர். இதுவரை 22 புலம்பெயர்ந்தோரின் இறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி, 39 வயதான டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான மத்திய பிரதேசத்திற்கு கால்நடையாக புறப்பட்டவர். 200 கி.மீ தூரத்தில் நடந்து சென்று சரிந்து விழுந்து இறந்தார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனாவுக்கு திடீரென ஊரடக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் செய்வது அறியாமல் திணறிப்போனார்கள். தினக்கூலிகளான அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கான எந்த உத்தரவாதம்,உதவி,உணவு பொருள் குறித்து எந்த அறிவிப்பும்,உதவிக்கரமும் நீட்டாத்தால் தங்களது சொந்த ஊருக்கு கிளம்ப முடிவு செய்து அவர்கள் கிளம்பிய படியெடுப்பு தான் இத்தனை உயிர் இழப்புக்கு காரணம். இன்னும் எத்தனை உயிர்களை கொரோனா ஊரடங்கு பறிக்க போகிறதோ..?