Asianet News TamilAsianet News Tamil

என்ன ஆனாலும் சரி... மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!

மயிலாடுதுறையில் உள்ள வானதிராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன்  என்பவரின் மகன் சேதுராமன். இவருக்கு வயது 40. எலக்ட்ரிஷன் வேலை செய்துவந்த இவர் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார். 

a man attempt suicide due to unable to get marry in Mayiladuthurai
Author
Chennai, First Published Jan 14, 2020, 4:33 PM IST

என்ன ஆனாலும் சரி....மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத  விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!  

பல வருடங்களாக திருமணம் ஆகாததால் விரக்தியில் எலக்ட்ரீசியன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள வானதிராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன்  என்பவரின் மகன் சேதுராமன். இவருக்கு வயது 40. எலக்ட்ரிஷன் வேலை செய்துவந்த இவர் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார். பிறகு இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் தந்தை வைத்தியநாதன்.

a man attempt suicide due to unable to get marry in Mayiladuthurai

ஆனால் சேதுராமன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை தெரிந்து கொண்ட பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேதுராமன் நமக்கு திருமணமே ஆகாதா என்ற விரக்தியில் கடந்த 10 ஆம் தேதி அன்று தான் குடித்த மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.இவரைவிட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios