அதிமுக Ex.MLA காலில் விழுந்த ஆளுநர்...!
புதுவை ஆளுநர் கிரண்பேடி, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் காலில் விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநரான கிரண்பேடி கடந்த 9 ஆம் தேதி அன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்திய காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியான இவர், 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஓம் சக்தி சேகர், ஆளுநர் கிரண்பேடிக்கு வாழ்த்து தெரிவித்தார். கிரண்பேடிக்கு சால்வை அணிவித்த ஓம் சக்தி சேகர், அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இதனைத் தொடர்ந்து கிரண்பேடியும் ஓம் சக்தி சேகரின் காலில் விழுந்தார். அப்போது ஓம் சக்தி சேகர், நீங்கள் எனக்கு அம்மா போன்று உள்ளீர்கள் என்று கூறினார்.