Asianet News TamilAsianet News Tamil

தமிழ் பாடல்கள் ஒலித்த ஸ்பீக்கரை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர் - தமிழர்கள் மீதும் தாக்குதல் .. பெங்களூருவில் பதற்றம் ..

பெங்களூரு நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் ஒலித்த ஸ்பீக்கரை கன்னட அமைப்பினர் உடைத்ததோடு தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் .

speakers were destroyed in bengaluru for playing tamil songs
Author
India, First Published Aug 21, 2019, 6:38 PM IST

பெங்களூருவில் இருக்கும் ஜேஜே நகரில் உள்ள மார்க்கண்டேய பகுதியில் கங்கம்மாதேசி உற்சவம் நடைபெற்றது . இந்த விழாவை அங்குள்ள தமிழர்கள் சேர்ந்து நடத்தியுள்ளனர் . இதற்காக காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கின்றனர்  .

speakers were destroyed in bengaluru for playing tamil songs

நிகழ்ச்சி நடந்த அன்று தமிழ் பாடல்களை அங்கு  ஒலிக்க செய்துள்ளனர் . அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த கர்நாடக ரஷன அமைப்பினர் சிலர் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் புகுந்து கலாட்டா செய்துள்ளனர் . அங்கிருந்த ஸ்பீக்கரை அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்  .

speakers were destroyed in bengaluru for playing tamil songs

இந்த சம்பவம் குறித்து காவல்துறை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது . எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது . இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்த்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios