நள்ளிரவில் ஆபாச படம் பார்த்துவிட்டு பெற்ற தாயையே கற்பழித்த கொடூர மகன்…. பெண்டெடுத்த போலீசார்….
குஜராத் மாநிலத்தில் நள்ளிரவில் செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டு பெற்ற தாயை கொடூரமாக கற்பழித்த மகனை போலீசார் சைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தில் அந்த தாய் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் பலன்பூரைச் சேர்ந்தவர் ராஜு. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவர் நடந்த வியாழக்கிழமை டூட்டி முடிந்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் ராஜு தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதையடுத்து திடீதென படுக்கை அறைக்குச் சென்ற அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது தாய் மீது பாய்ந்த பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் கத்தி கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அம்மாவுக்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்பதால் அக்கம் பக்கத்தினர் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். இதையடுத்து ராஜு தனது தாயை பலவந்தமாக கற்பழித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜூ மீது தாயும், தந்தையும் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆபாசப்படம் பார்த்தால்தான் தான் இப்படி நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது தாயுடமும், தங்கையிடமும் தவறாக முயற்சி செய்துள்ளதாகவும் ராஜு கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.