Asianet News TamilAsianet News Tamil

உடலுறவில் திருப்தி இல்லை...! 8 பெண்களை கல்லால் அடித்தே கொலை செய்தேன்...! உல்லாசத்தை பற்றி போலீசாரிடம் பாயிண்ட் பாயிண்ட்டாக விவரித்த சைகோ...!

sex torcher and murder for 8 ladies
sex torcher and murder for 8 ladies
Author
First Published May 31, 2018, 7:48 PM IST


பகலில் கூலி தொழிலாளியாகவும், இரவில் பல பெண்களுடன் உறவுக் கொள்ளும் காமுகனாகவும் இருந்த சைகோ கொலைக்காரனை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில வருடங்களாக பெங்களூரில் தங்கி கட்டிட வேலை செய்து வருபவர் துறைகபில். இவர் தங்கி உள்ள பகுதியில் ஒரு பெண் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் உள்ள அனைவரிடத்திலும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.sex torcher and murder for 8 ladies

இதில் துறை முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் மீது சந்தேகம் ஏற்படவே இவரை தீவிரமாக விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.sex torcher and murder for 8 ladies

2002 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது, திருப்தி இல்லை என்பதால் கட்டிய மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். sex torcher and murder for 8 ladies

பின் போலீசாரால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அதைதொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு கட்டிட தொழிலுக்காக சென்று, சம்பாதிக்கும் பணத்தை இரவில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க செலவிட்டுள்ளார். அவர்களிடம் இருந்து இவர் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை என்றால் அந்த பெண்களை கல்லால் அடித்து கொலை செய்வதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

 sex torcher and murder for 8 ladies

இப்படி இதுவரை 8 பெண்களை காம கொடூரன்... சைகோ... துறைகபில் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios