கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..! ஜூன் 24 வரை லீவு - பெருமூச்சி விட்ட மாணவர்கள்..!
ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது
கோடைவெயில் சமாளிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒவ்வொருஆண்டும் கோடை காலம் என்றாலே தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் இறக்கநேரிடுகிறது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகபார்க்கப் படுகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தாலும் குறிப்பாக ஆந்திராவில் மற்ற மாநிலத்தை விட வெயில் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், கோடை கத்தரி வெயில் முடிந்து வழக்கம் போல் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம்
ஆனால் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் வெயில் காரணமாக ஆந்திராவில் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.