Asianet News TamilAsianet News Tamil

அடுத்த ரெண்டு நாளைக்கு பாலியல் தொழிலுக்கு விடுப்பு...!! மும்பையில் 300 அழகிகள் அதிரடி முடிவு...!!

இந்நிலையில்  மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் , கொரோனாவை எதிர்க்கும் நோக்கிலும்  பாலியல் தொழிலுக்கு விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளனர் .

Mumbai prepares for a complete lock down in light of the COVID-19 pandemic, daily wagers, including sex workers
Author
Mumbai, First Published Mar 21, 2020, 6:22 PM IST

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நிலையை மக்கள்  தாங்களாகவே முன்வந்து கடைபிடிக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் ,  மும்பை பாலியல் தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளனர் . அதே நேரத்தில் மகாராஷ்ட்ரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில்  பாலியல் தொழிலாளர்கள் அதற்கு  தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளனர்.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை காட்ட தொடங்கியுள்ளது . 

Mumbai prepares for a complete lock down in light of the COVID-19 pandemic, daily wagers, including sex workers

இதுவரை  இந்தியா முழுவதும் 271 பேர் அந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால்  இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் நாளை 22ம் தேதி ஒரு நாள் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் அடங்கி  ஊரடங்கு நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது . அதேநேரத்தில் மகாராஷ்டிரா அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்நிலையில் அம்மாநிலத்தில் தானே மாவட்டத்தில் பிவான்டி என்ற பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில்  மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் , கொரோனாவை எதிர்க்கும் நோக்கிலும்  பாலியல் தொழிலுக்கு விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளனர் .  அதாவது நாளை நாளைய மறுதினம் ஆகிய இரண்டு தினங்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது இல்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். 

Mumbai prepares for a complete lock down in light of the COVID-19 pandemic, daily wagers, including sex workers

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அவர்களின் இரண்டு நாள் விடுப்பை ஈடுகட்ட பல தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன அவர்களின் பிள்ளைகளை பராமரிக்கவும் அவர்களின்  குடும்ப செலவுக்கு உதவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .  ஷர்மஜீவி சங்கத்னா என்ற அமைப்பு அவர்களின்  குழந்தைகளை பராமரிக்க முடிவு செய்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் கான் ,  அவர்கள்  வசிக்கும் பகுதியில் வெளி ஆட்களுக்கு அடுத்த இரண்டு தினங்களுக்கு அனுமதி இல்லை .   அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios