குரங்குகள் தாக்கியதில் 225 பேர் மருத்துவமனையில் அனுமதி
உத்தரபிரதேச மாநிலத்தில் குரங்கள் தாக்கியதில் 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் கடந்த 15 நாட்களில் மட்டும் குரங்குகள் தாக்கி 225 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் வெப்பம் காரணமாக குரங்கள் ஆக்ரோஷம் அடைந்து தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மருந்துகள் இன்னும் தேவைப்பட்டால் தாமதமின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மருந்துகள் இன்னும் தேவைப்பட்டால் தாமதமின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.