Asianet News TamilAsianet News Tamil

நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்... ஆண் சாமியாரின் பகீர் வீடியோ வாக்குமூலம்!

MeToo'சர்ச்சையில் சிக்காத ஒரே ஆண்மகன் என்ற புகழ் மற்றும் மற்ற ஆண்மகன்களின் வயித்தெரிச்சலுடன் வலம் வந்த நித்யானந்தா லேட்டஸ்டாக வலைதளங்களில் ‘அவனா நீ’ என்ற நக்கலுக்கு ஆளாகி வருகிறார்.

MeToo'சர்ச்சையில் சிக்காத ஒரே ஆண்மகன் என்ற புகழ் மற்றும் மற்ற ஆண்மகன்களின் வயித்தெரிச்சலுடன் வலம் வந்த நித்யானந்தா லேட்டஸ்டாக வலைதளங்களில் ‘அவனா நீ’ என்ற நக்கலுக்கு ஆளாகிவருகிறார். அந்த அபாண்ட பழியை சுவாமிகள் மீது போடுவது அவரது சிஷ்யகோடிகளுள் ஒருவர்தான்.

 நேற்று (அக்டோபர் 31) நித்யானந்தா மீது அவரது தீவிர பக்தர்களுள் ஒருவரான ஆண் சாமியார்  புகார் தெரிவிக்கும் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. “2014ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் எல்லோரது முன்னிலையிலும் ’கபளீகரம்’ செய்யப்பட்டேன். அது மட்டுமல்லாமல், நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்கிற பெயரில் கடுமையாக  என்னை ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை” என்று அவர் தெரிவித்தார். ஆனால் அவர் சம்பவம் சம்பவம் என்கிறாரே தவிர அதுபற்றி விலாவாரியாக எதுவும் சொல்லவில்லை.

இதே ஆ’சுவாமிகள்தான் வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தின்போது உலகத்திலுள்ள அத்தனை கெட்டவார்த்தைகளிலும் கவிஞரைக் கழுவிக்கழுவி ஊற்றினார் என்பது மறக்கக்கூடாதது. இதோ தான் ‘கபளீகரம்’ செய்யப்பட்டதை திருவாய் மலர்ந்து சொல்கிறார் சுவாமிகள்...வீடியோ
 

Video Top Stories