Asianet News TamilAsianet News Tamil

இளையராஜா பாடலைப் பாடி யானையைத் தூங்கவைக்கும் பாகன்... சென்சிடிவ் வீடியோ...!

இசைஞானி இளையராஜாவின் பெருமையைப் பத்தி சொல்ல இனிமே என்ன இருக்கு என்று எக்காலமும் இருந்துவிடமுடியாது என்பதற்கு உதாரணமாக இன்னொரு ஆச்சரியமான சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் பெருமையைப் பத்தி சொல்ல இனிமே என்ன இருக்கு என்று எக்காலமும் இருந்துவிடமுடியாது என்பதற்கு உதாரணமாக இன்னொரு ஆச்சரியமான சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் பாஸ்டியன், வினய்சுந்தர் என்ற யானையை வளர்த்துவருகிறார். கடந்த சில நாள்களாகத் தூங்குவதற்கு சிரமப்பட்டுவந்த யானைக்கு, பாட்டுப்பாடி குழந்தையைப் போல பாவித்து தூங்கவைக்கிறார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி  பல லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பே பாகன் பாடும் மலையாளப் பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா என்பது. 1984-ம் ஆண்டு வெளியான ‘மங்களம் நேருன்னு’ என்ற மலையாளப் படத்தில் உள்ள ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார். இந்தப் படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார், கிருஷ்ண சந்திரன் என்பர் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் ரசிகர்களை வம்பிழுத்துக்கொண்டு, வலைதளங்களில் எப்போதும் வீறுகொண்டு அலையும் ‘ராஜாடா’ கோஷ்டிகள் சிலிர்த்துக்கொண்டு அலைய இன்னொரு செய்தி. அடிச்சி விளையாடுங்க பாஸ்.

Video Top Stories