வாயை ஊதச் சொன்ன போலீஸ்... வாயிலேயே குத்துக்குத்துனு குத்திய வக்கீல்... அதிபயங்கர சண்டை வீடியோ!
கர்நாடகாவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
கர்நாடகாவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரிவந்தது. அவரிடம் வாயை போக்குவரத்து போலீசார் ஊதச் சொல்லினர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரை கடுமையான தகாத வார்த்தையால் வசைபாடினார். பிறகு போலீஸ்காரர்களை கடுமையாக தாக்கினார்.
சாலையோரம் உள்ள கடையில் இருந்த பொம்மைகளை தூக்கி அடித்தலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த சண்டைக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.