அமெரிக்காவின் செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி..!! அசுர வளர்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி..!!
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சி கண்டு வருகிறது .
ஒன்பது செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி- 48 ரக ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது . இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இது என்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற உள்ளதாக இஸ்ரோ சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார் . நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது .
பூமியை கண்காணிக்கவும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் வகையிலும் ரி சாட்- 2 பி ஆர் -1 செயற்கைக்கோளை தாங்கியபடி பிஎஸ்எல்வி 48 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது . ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிற்பகல் 3. 25 மணிக்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது . சுமார் 628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்களுடன் அமெரிக்காவில் 6 செயற்கைக்கோள்கள் , இஸ்ரேல் , ஜப்பான் , இத்தாலி , ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோளும் வணிக ரீதியாக இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
ரிசாட்- 2 பிஆர்-1 செயற்கைகோள்கள் 5 ஆண்டுகள் பூமியை கண்காணிக்கும், என இஸ்ரோ விண்வெளிஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது . இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சி கண்டு வருகிறது . அந்த வரிசையில் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.