செக்சின் போது காதலி மரணம்! நடந்தது என்ன? காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
உடலுறவின் உச்சத்தில் இருந்து போது தனது காதலி உயிரிழந்தது பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இஸ்ரேலை சேர்ந்த 23 வயதான ஓரிரான் யக்கோவ் தனது 20 வயதே ஆன காதலி பஃவாவுடன் இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். மராட்டிய மாநிலத்திற்கு சென்ற அவர் மும்பை கொலாபா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியுடன் தங்கியுள்ளார். இரவில் ஓட்டலுக்கு வந்த காதலர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது காதலன் ஓரிரான், தனது காதலியை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த போதே திடீரென காதலிக்கு மூச்சின் வேகம் அதிகரித்து அங்கேயே உயிரிழந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் காதலி பஃவா எப்படி உயிரிழந்தார் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மரணம் நிகழ்ந்து ஓராண்டுக்கு பின்னர் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் காதலி பஃவா மரணம் எப்படி நிகழ்ந்தது என்று போலீசாருக்கு தெரியவந்தது. உடலுறவின் போது, உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த பஃவாவின் கழுத்தை ஓரிரான் நெறித்ததே மரணத்திற்கு காரணம் என்று கண்டுபிடித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஓரிரான் இஸ்ரேலில் உள்ளதால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் காதலி உயிரிழந்த அன்று இரவு நடந்தது என்ன என்று ஈமெயில் மூலமாக ஓரிரான் மும்பை போலீசுக்கு விளக்கம் அளித்தள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- இருவரும் மிக தீவிரமாக செக்சில் ஈடுபட்டுக் கொண்டு கொண்டிருந்தோம். அப்போது என் காதலி எனக்கு மிகவும் இன்பம் வேண்டும் என்று கூறினார். மேலும் எனது காதலி எனது கைகளை அவளது கழுத்தில் வைக்குமாறு வலியுறுத்தினால்.
நானும் அவள் கூறியபடி அவள் கழுத்தில் என் கையை வைத்துக் கொண்டே உடலுறவில் ஈடுபட்டேன். திடீரென கழுத்தில் இருந்து என்னை கையை எடுக்குமாறு கூறினாள், நானும் கையை உடனடியாக எடுத்தேன், பிறகு மீண்டும் அவள் என்னிடம், கையை கழுத்தில் வைத்தால் இன்பம் அதிகமாக இருக்கிறது, மீண்டும் கையை கழுத்தில் வை என்றால். நானும் மறுபடியும் அவள் கழுத்தில் கை வைத்து வேகமாக இயங்க ஆரம்பித்தேன். அதன் பிறகு திடீரென அவள் பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டாள். எனக்கு பதற்றம் ஆகிவிட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். என் காதலி விரும்பியபடி அவளுக்கு அதிக இன்பம் கொடுக்க வேண்டும் என்றே கழுத்தில் கையை வைத்தேன், நான் அவளை கொலை செய்யவில்லை. இவ்வாறு ஓரிரான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.