Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் 13 ரூபாய்தான்: 'மினரல் வாட்டரை' கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க பினராயி அரசு முடிவு

கேரளாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஒரு லி்ட்டர் 'மினரல் வாட்டரை'(சுத்திகரிக்கப்பட்டகுடிநீர்) 13 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

Bottled drinking water in Kerala to cost Rs 13 a litre
Author
Chennai, First Published Feb 14, 2020, 4:43 PM IST

கேரளாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஒரு லி்ட்டர் 'மினரல் வாட்டரை'(சுத்திகரிக்கப்பட்டகுடிநீர்) 13 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

Bottled drinking water in Kerala to cost Rs 13 a litre

இதுகுறித்து உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பி. திலோத்தமன் நிருபர்களுக்கு திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில், " குடிநீர் பாட்டில் விலையை வர்த்தகர்கள் தங்கள் விருப்பப்படி விலையில் விற்பனை செய்கிறார்கள், வரைமுறையின்றி விலை வைக்கப்படுகிறது என்று மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வந்தன. இதையடுத்து, குடிநீரை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயனும் ஒப்புதல் அளித்துள்ளார்.

Bottled drinking water in Kerala to cost Rs 13 a litre

இதன்படி அடுத்த இருநாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இனிமேல் மாநிலத்தில் எந்த வர்த்தகரும், கடைக்காரரும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விலையை ரூ.13-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. மக்களின் குடிக்கும் குடிநீருக்கு அதிகவிலை வைக்கப்படுவதால் அதைக் கட்டுக்குள் கொண்டுவர இருக்கிறோம். அனைத்து குடிநீரும் பிஎஸ் தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாத நிறுவனங்களையும் மூடப்போகிறோம் " எனத் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios