டாக்டரை கட்டிப்போட்டு மனைவி, மகளை கதற கதற கற்பழித்த 20 பேர் கொண்ட கும்பல்…. காட்டுப் பகுதியில் நடந்த கொடூரம் !!
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் டாக்டர் ஒருவர் கிராமப் பகுதியில் உள்ள தனது கிளினிக்கை பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, காட்டுப் பகுதியில் அவர்களை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று அவரை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவர் கண் எதிரே மனைவியையும், மகளையும் கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கயா மாவட்டம் சோந்தியா என்ற கிராமத்தில் ராஜ்கர் என்ற டாக்டர் சிறிய அளவில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். கிராமப்பகுதியில் சேவை மனப்பான்மையுடன் ராஜ்கர் நடத்திவரும் அந்த மருத்துவமனையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.
அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல் அடிக்கடி அவ்வழியாக செல்பவர்களை அடித்து நகை, பணத்தை பறித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ராஜ்கர் கிளினிக்கை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் அந்த நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது 20 பேர் கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. டாக்டர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தால் அவரை அங்கிருந்த மரம் ஒன்றில் கொள்ளை கும்பல் கட்டிப் போட்டது.
பின்னர் அந்த 20 பேர் கொண்ட கும்பல் டாக்டரின் மனைவி மற்றும் மகளை அவர் கண் எதிரே துப்பாக்கி முனையில் மாறி,மாறி கற்பழித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து அவ்வழியாக வந்த கிராம மக்கள் சிலர் அவர்களை மீட்டு கயாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 பேர் கொண்ட கொள்ளை கும்பலில் 2 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.