Asianet News TamilAsianet News Tamil

நடிகையிடம் கேவலமாக நடந்து கொண்ட வாலிபர்கள்...! ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசினர்...! 

Actress sexually harassed MP
Actress sexually harassed MP
Author
First Published Apr 23, 2018, 6:31 PM IST


தொலைக்காட்சி நடிகை ஒருவர் ஆக்டிவாவில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு வாலிபர்கள் அவரது ஸ்கர்ட்டைப் பிடித்து இழுத்து, உள்ளே என்ன இருக்கிறது என்று அசிங்கமாக பேசிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை செய்திகள். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருந்தாலும், பெண்கள் மீதான் வன்கொடுமைக்கும் தூக்கு தண்டனை கொடுங்கள் என்று பெண்கள் அமைப்பினர் கூறுகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய நாளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த நடிகை ஒருவர். இவர் மாடலாகவும் இருந்து வருகிறார். இவர், தன்னுடைய ஹோண்டா ஆக்டிவாவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர் அருகில் பைக்கில் வந்த இரண்டு பேர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். நடிகை அணிந்திருந்த ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து, உள்ளே என்ன இருக்கிறது... காட்டு என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை, அதனை தடுக்க முயன்றார். அப்போது அவர், ஆக்டிவாவில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

Actress sexually harassed MP

இந்த சம்பவம், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்தபோதும் யாரும் உதவ முன் வரவில்லையாம். இதற்கிடையில் அந்த நபர்கள் தப்பியோடி விட்டனர். அந்த நடிகை காயமடைந்த தனது காலை புகைப்படும் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios