இப்போதாவது யூஸ் பண்ணுங்க !! ஆதார் கார்டு, பான் எண் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு… இணைப்பது எப்படி தெரியுமா?
பான் கார்டுடன் ஆதார் எண்ணை 2019 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம், இல்லாவிட்டால் பான் எண் காலாவதியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான காலக்கெடுவை மத்திய நிதியமைச்சர் நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளது
இதன்படி வரும் 30-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்தநிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம்தேதிவரை காலக்கெடுவை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது. இதையடுத்து 7-வது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல்செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டத. பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஏராளமானோர் தங்கள் பான் எண்ணைஆதார்எண்ணுடன் இணைக்காமல் இருந்தனர். அவர்களுக்கான காலக்கெடு 30ம் தேதிமுடிவடைய இருந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு நிம்மதியளித்துள்ளது
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு 2019 செப்டம்பர் 30் ந்தேதி முடிவடைய இருந்து.அந்தக் காலக்கெடுைவ 3 மாதங்கள் அதாவது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்துள்ளோம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இணைப்பது எப்படி?
1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.
6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.