Asianet News TamilAsianet News Tamil

பாதிரியர்கள் செஞ்ச வேலையப் பாருங்க !! அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள் கடந்த  70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களையும், சிறுமிகளையும்  பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.  மக்களுக்கு அன்பைப் போதிக்கும் இந்த பாதிரியார்கள் செய்த செயல் உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது.

300 Church fathers rape 1000 childrens
Author
Chennai, First Published Aug 17, 2018, 11:51 PM IST

பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த எட்டு டையோசிஸ்கள் உள்ளன. அவற்றில், 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதில், 6 டையோசிஸ்களின் சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரை, அந்த மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட்டுக்கு உட்பட்ட ஜூரி அமைப்பு இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்தது.

300 Church fathers rape 1000 childrens

இதையடுத்து  அந்த ஜுரி அமைப்பு அறித்த  900 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பென்சில்வேனியா அட்டர்னி ஜெனரல் ஜோஸ் ஷாபிரோ வெளியிட்டார்.

அதில் 1940ம் ஆண்டு முதல், 70 ஆண்டுகளாக 300 பாதிரியார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுளளது. . இவர்களில் பலர் பாதிரியாக்ள் பதவி உயர்வு பெற்றுவிட்டனர் என்றும்  பலர் ஓய்வு பெற்று விட்டனர் என்றும் தெரியவந்துள்ளது..

300 Church fathers rape 1000 childrens

இநத பாதிரியார்கள செய்த பாலியல் தொடர்பான செயல்களில் ஒரு சிலவற்றை அட்டர்னி ஜெனரல் ஜோஸ் ஷாபிரோ வெளியிட்டுள்ளார். டான்சில் ஆப்ரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஏழு வயது சிறுமியை, பார்க்க சென்ற பாதிரியார் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மற்றொரு பாதிரியார், 9 வயது சிறுவனை செக்ஸ்சுக்கு வற்புறுத்தியுள்ளார். மற்றொரு பாதிரியார் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவனை பாவ மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.

300 Church fathers rape 1000 childrens

இரண்டு பாதிரியார்கள், சிறுமிகளை கற்பழித்து கர்ப்பமாக்கி உள்ளனர். ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி உள்ளனர். இன்னொரு சிறுமிக்கு ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி பல கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்டப்பட்டுள்ளது.

இந்த புகார்களையடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் பல பெரிய மனிதர்கள் தப்பி விட்டதாக கூறப்படுகிறது..

300 Church fathers rape 1000 childrens

சிறுவர்களையும், சிறுமிகளையும் பாதிரியார்கள் சீரழிப்பது  தொடர்பாக வாடிகன் சிட்டி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பாதிரியார்களை கட்டுப்படுத்த வேண்டிய நிர்வாகம் ஒன்றுமே செய்யவில்லை என கூறப்படுகிறது.  பாதிரியார்கள் தொடர்பான இந்த அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios