பணக்கார இளைஞர்களுடன் உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்... டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் க்ரைம்!
பணக்கார இளைஞர்களுடன் டேட்டிங் சென்றுவிட்டு படுக்கை அறைக்கு சென்று அவர்களை நிர்வாணமாக்கிய பிறகு அவர்களுடன் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி பணம் பறித்த பெண் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் துஷ்யந்த் சர்மா. இவருக்கு மொபைல் டேட்டிங் ஆப் மூலம் பிரியா சேத் என்பவர் அறிமுகமானார். சர்மா தான் ஒரு கோடீஸ்வரன் என்று ப்ரொபைலில் போட்டிருந்தார். இதை கண்டதும் பிரியா, சர்மாவுடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் ஜெய்ப்பூரில் குடியிருக்கும் ஒரு அபார்டமென்ட்டுக்கு மதிய உணவுக்காக பிரியா, சர்மாவுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனால் பல்வேறு கனவுகளுடன் பிரியா வீட்டுக்கு சர்மா சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே பிரியாவின் நண்பர்கள் திக்ஷாந்த் கம்ரா , லக்ஷயா வாலியா ஆகியோர் தயாராக இருந்தனர். இதையடுத்து சர்மாவை ஒரு ரூமுக்குள் கட்டி போட்டுவிட்டு அவரது தந்தையிடம் லட்சகணக்கில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து பணம் சொன்ன நேரத்தில் கிடைக்கததால் அவரை கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் போலீஸார் விசாரணை நடத்தியபோது பிரியாவும் அவரது நண்பர்களும் சிக்கினர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் சர்மாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்களையும் வெளியாகியுள்ளது. அதில், பிரியா சேத்தின் தந்தை ராஜஸ்தான் அரசு கல்லூரியின் பேராசிரியர். அப்போது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டிருந்த சமயத்தில் ஒரு பேப்பரில் பகுதி நேர வேலைக்கான விளம்பரம் வந்திருந்ததாம். அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது பாலியல் தொழிலுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் வருமானம் குவியும் என்று அந்த ஏஜென்ட் கூறினாராம்.
இதனால் பணத்தாசை பிடித்த பிரியா, தனது நண்பர்களுடன் சேர்ந்து பணப்பறிப்பில், ஏடிஎம் கொள்ளை ராயலாக ஜெய்பூரை சுற்றி வந்துள்ளார்.அதேபோல, இவர்கள் டேட்டிங் ஆப் மூலம் பணக்கார நபர்களுடன் பழகி அவர்களை வீட்டுக்கு வரவழைத்து விருந்து அளிப்பார். பின்னர் அவர்களது உடைகளை அவிழ்த்துவிட்டு உல்லாசமாக இருப்பார்களாம், அவர்கள் உல்லாசமாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோ எடுப்பாராம் அதை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி வருவதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.