எட்டாவது மாடியில் இருந்து குதித்த சிறுமி…. வைரலாகும் வீடியோ !!
மும்பை புறநகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒன்றின் 8 ஆவது மாடியில் இருந்து சிறுமி ஒரவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மாடியில் இருந்து குதித்ததை எதிர் குடியிருப்பு மாடியில் இருந்து ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை மேற்கு புறநகர் காந்திவிலி தாக்கூர் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 5-வது மாடியில் வசித்து வந்த ஹர்சிகா என்ற 14 வயது சிறுமி, நேற்று திடீரென 8-வது மாடிக்கு சென்று அங்குள்ள வெளிப்புற சுவரில் நின்றபடி கீழே குதிப்பதற்கு தயாராகி கொண்டிருந்தாள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள்,அவரை கீழே குதித்துவிட வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத சிறுமி சட்டென அங்கிருந்து குதித்துவிட்டார்.
இதில் தரையில் மோதி அவள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமியை . குடியிருப்புவாசிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தற்கொலை செய்து கொண்ட சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டாள் என்பது தெரியவில்லை. அவளது செல்போன், சமூக வலைத்தளம் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சிறுமி ஹர்சிகா உயிரை மாய்த்து கொள்வதற்காக மாடியில் இருந்து குதித்ததை அந்த கட்டிடத்தின் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒருவர் செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்.
தற்போது அந்த தற்கொலை காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.