Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் அந்த நேரத்தில் மட்டும் ‘அதைச்’ செய்யக்கூடாது- மீறினால் அவ்வளவுதான்..!!

உடலுறவுக்கு என்று சில சிந்தபர்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அப்போது உறவுகொள்ளும் போது உடலுக்கும் மனநலனுக்கும் ஆரோகியம் கிடைப்பதாக வல்லுந்ர் கூறுகின்றனர். ஒருவேளைஅதை மீறி நடந்துகொண்டால், அவ்வளவுதான். 
 

sex should not happen after alcohol consuming at night timings say experts
Author
First Published Nov 19, 2022, 10:30 AM IST

உடலுறவு கொள்ளவும் சிரிக்கவும் ஒரு நேரம் இருக்கிறதாம். இது உண்மை தான் என்று நிபுணர்களும் கூறுகின்றனர். அதாவது உதாரணத்துக்கு இரவில் போதை மருந்து உட்கொண்ட பிறகு உடலுறவில் ஈடுபடவே கூடாது. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, மது அருந்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

உடலுறவு கணவன் மனைவி இருவருக்கும் நன்மை பயக்கிறது. சீரான இடைவெளியில் உடலுறவுகொள்வதன் மூலம் உடல்நலம் ஆரோக்கியம் பெறுகிறது, மனநலனுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. வாரத்து ஒருமுறை முதல் மூன்று முறை வரை உடலுறவு கொண்டால் மாரடைப்பு அபாயம் குறைகிறதாம். அதேசமயத்தில் சதாசர்வகாலமும் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்திய ஆய்வில் செக்ஸ் குறித்து பல அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவில் மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டால் மரணம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் மது அருந்துவதும் உடலுறவு கொள்வதும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.உடலுறவுக்குப் பிறகு வயிறு நிரம்பினால், அப்போதும் மாரடைப்பு அபாயம் ஏற்படுகிறதாம். மாரடைப்பு மட்டுமின்றி பக்கவாதமும் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உங்களுடைய துணை தூக்கத்தில் உடலுறவு கொள்கிறாரா? அப்போது இந்த பாதிப்பாக இருக்கலாம்..

உடலுறவு என்பது உடலுக்கு கிடைக்கும் சுகம் மட்டுமல்ல. பல நோய்களைக் குணப்படுத்தும் செயல்முறையாகவும் உள்ளது. உடலுறவு மூலம் கணவன்-மனைவிக்கு இடையே உள்ள உறவு வலுவாக அமையும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலுறவு கொள்ளாமல் மது அருந்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இரவை விட காலையில் உடலுறவு கொள்வதில் அதிக கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை, அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது பசியை அதிகமாக தூண்டிவிடுமாம். 

அப்போது சாக்லேட்டுகள் சாப்பிடலாம். அதனால் ஆற்றமுடியாத பசி அடங்கிவிடுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சாக்லேட்டுகளில் செரோடோனின் உள்ளது. இது திடீரென உருவாகும் பசியை கட்டுக்குள் கொண்டுவருகிறது. மேலும் மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும். இதனால் உடலுறவின் மூலம் சோர்ந்து போயிருக்கும், உங்களுடைய தேகம் சாக்லேட் சாப்பிட்டவுடன் புத்துயிர் பெறும். பகலில் மட்டுமல்ல, இரவிலும் உடலுறவுக்கு பிறகு சாக்லேட் சாப்பிடுவது நல்லது என்பது செக்ஸ் குறித்து ஆய்வு நடத்தும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios