MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IND vs NZ: இந்தியா‍-நியூசிலாந்து பைனல் ரத்தானால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை கிடைக்கும்?

IND vs NZ: இந்தியா‍-நியூசிலாந்து பைனல் ரத்தானால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை கிடைக்கும்?

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் 9ம் தேதி இறுதிப்போட்டியில் மோதுகின்றன. ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்து ஆனால் யாருக்கு கோப்பை கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Rayar r
Published : Mar 07 2025, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Champions Trophy: IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை காண துபாய் சர்வதேச மைதானம் தயாராக உள்ளது. இந்திய அணி இந்த தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் தோற்கவில்லை. 

25
இந்தியா‍-நியூசிலாந்து பைனல்

இந்தியா‍-நியூசிலாந்து பைனல்

அரையிறுதியில் ரோஹித் சர்மா படை ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் நியூசிலாந்து அணியும் நல்ல ஃபார்மில் உள்ளது. அரையிறுதியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது இரண்டாவது முறையாகும். ஒருவேளை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டால் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.

35
சாம்பியன்ஸ் டிராபி 2025

சாம்பியன்ஸ் டிராபி 2025

மார்ச் 9 அன்று மழை பெய்தால் இறுதிப் போட்டியின் நிலை என்ன?

துபாயில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால், வானிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஏனென்றால் நாம் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. ஒருவேளை இந்த போட்டியில் மழை பெய்தால், அதற்கு ரிசர்வ் டே (மார்ச் 10) ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 9ஆம் தேதி முடிவு எட்டப்படவில்லை என்றால், அடுத்த நாள் போட்டி நடைபெறும். 

ஒருவேளை இரண்டு நாட்களிலும் போட்டி நடைபெறவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்படும். அரையிறுதியில் இருந்த விதிமுறைகள் இதில் பொருந்துமா என்று நீங்கள் யோசிக்கலாம், அதாவது போட்டி ரத்து செய்யப்பட்டால், அதிக புள்ளிகள் பெற்ற அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்? அப்படி எதுவும் இல்லை என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். இறுதிப் போட்டிக்கான ஐசிசி விதிமுறைகள் பற்றி இப்போது பார்ப்போம்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: யாருக்கு கோப்பை?

45
ஐசிசி விதி

ஐசிசி விதி

இறுதிப் போட்டிக்கு ஐசிசி என்ன விதிகளை உருவாக்கியுள்ளது?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான இறுதிப் போட்டி சாத்தியமில்லாமல் போனால், சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரு கேப்டன்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். போட்டி நடைபெறவில்லை என்றால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டு விதிமுறையை அமல்படுத்தும். இருப்பினும், இந்த விதிக்கு முன் டிஎல்எஸ் முறை அமல்படுத்தப்படும். ஆனால், இரு அணிகளும் 25 ஓவர்கள் விளையாடி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த தொடரில் ஏற்கனவே ஒரு இறுதிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதையும் ஒருமுறை பார்ப்போம்.

55
தோனி தலைமையில் சாம்பியன்

தோனி தலைமையில் சாம்பியன்

2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது, இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. அந்த போட்டியிலும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டது, ஆனால் இரண்டு நாட்களும் தொடர்ந்து மழை பெய்தது. அந்த முறையும் இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்தது, இலங்கையை எதிர்கொண்டது. 

இந்தியா நான்காவது முறையாக இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதன் பிறகு 2002ல் மழை குறுக்கிட்டது. பின்னர், 2013ல் தோனி தலைமையில் அணி சாம்பியன் ஆனது. அதன் பிறகு 2017ல் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. ஆனால், இப்போது இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மிஸ்டர் 360யின் ஆல்-டைம் பேவரைட்! அதுலயும் கிங் தோனி தான்

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved