வரலாற்றில் இடம்பிடித்த தமிழிசை..! பதவியேற்பில் கிடைத்த உச்ச கட்ட மரியாதை..! புகைப்பட தொகுப்பு!
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். தமிழிசை வந்து இறங்கியதும், அவருக்கு பூங்கொத்து கொடுத்து உச்ச கட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார் தமிழிசை.
பின் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநராக பொறுப்பேற்று கொண்டார். தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் தமிழிசை. இவர் பதவி ஏற்க வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட தமிழிசை
வரவேற்பு கொடுக்கும் தெலுங்கானா அரசு
பதவி ஏற்பு விழாவில்
வரவேற்கும் அரசியல் தலைவர்கள்