- Home
- Gallery
- Anna Serial: பரணியை வெளியே போக சொன்ன சண்முகம்.! உச்ச கட்ட அதிர்ச்சியில் குடும்பம் - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: பரணியை வெளியே போக சொன்ன சண்முகம்.! உச்ச கட்ட அதிர்ச்சியில் குடும்பம் - அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான அண்ணா சீரியலில் நாளைய எபிசோடில் என்ன நடக்க உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்ந சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பரணியின் தோழிகள் ஊருக்கு கிளம்ப சண்முகம் பரணி அவர்களை வழி அனுப்ப வந்த இடத்தில் ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்து உயிருக்கு போராட பரணி அதை பார்த்து ஓடிப் போய் உதவி செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறாள்.
அதன் பிறகு பரணியின் தோழிகள் நீ சேவை செய்வதெல்லாம் சரிதான் ஆனால் பிராக்டிஸ் இல்லாம பண்ணி உன் பேரை கெடுத்துக்காத என்று சொல்ல சண்முகம் அவளுக்கு தாலி கட்டி கணவ கலைச்சிட்டேன் என்று வருத்தப்படுகிறான்.
Anna Serial
அதன்பிறகு வீட்டுக்கு வந்த சண்முகம் பரணி பேக்கை எடுத்து வைத்து நீ உன் வீட்டுக்கு கிளம்பு என்று சொல்ல, எல்லோரும் என்னாச்சு என்று பதற பரணி என் வீட்டுக்கு எதுக்கு போகணும் என்று கேட்க நீ சுதந்திரமா பறக்க வேண்டிய பறவை இது உனக்கு ஜெயில் தான் என்று சொல்கிறான். ஆனால் பரணி சும்மா நடிக்காத 100 நாள் யார் என்ன சொன்னாலும் நான் வீட்டை விட்டு போக மாட்டேன். 100 நாளைக்கு பிறகு ஒரு நாள் கூட இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று பேக் எடுத்துக் கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள்.
அத்துடன் அம்மாவாக நினைத்து மரத்தின் அருகே வந்த சண்முகம் நான் நினைக்கிறது எனக்கு புரியுதா அம்மா என்று வருத்தப்பட்டு பேச, வைகுண்டம் என்னாச்சு என்று கேட்க சண்முகம் நடந்த விஷயத்தை சொல்ல பரணி சேவை செய்யட்டும் ஆனா அவ நம்ம வீட்ல இருந்தே செய்யட்டும் என சொல்கிறார். இருந்தாலும் சண்முகம் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டிய பொண்ணு கிடையாது, நம்ம குல சாமி என பரணியை புகழ்ந்து பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.