- Home
- Gallery
- பழைய போட்டோக்களை வெளியிட்டு... மகன்கள் மீது பாசமழை பொழியும் விக்கி - நயனின் அன்சீன் கிளிக்ஸ் இதோ
பழைய போட்டோக்களை வெளியிட்டு... மகன்கள் மீது பாசமழை பொழியும் விக்கி - நயனின் அன்சீன் கிளிக்ஸ் இதோ
விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி கடந்தாண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், அவர்களின் அன்சீன் போட்டோஸ் தற்போது வைரலாகிறது.

nayanthara vignesh shivan family
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன் கடந்தாண்டு திருமண பந்தத்தில் இணைந்தார். இவர்களுக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரொனில் சிவன், உலக் தெய்விக் சிவன் என பெயரிட்டனர். குழந்தைகளை வெளியுலகுக்கு காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தார் நயன்தாரா.
Nayanthara with her sons
இந்த நிலையில், கடந்த மாதம் திடீரென சர்ப்ரைஸாக இன்ஸ்டாகிரமில் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா, முதல் பதிவிலேயே தன்னுடைய மகன்களின் முகத்தை வெளியுலகுக்கு காட்டினார். அதன்பின்னர் மகன்களுடன் ஓணம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படங்களையும் பதிவிட்டு அன்பை பொழிந்திருந்தார் நயன். இந்த நிலையில், தற்போது தங்கள் மகன்களின் முதல் பிறந்தநாள் நெருங்கி வரும் நிலையில், உயிர் மற்றும் உலகத்தின் அன்சீன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் விக்கி - நயன் ஜோடி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
nayanthara family photo
இன்று காலை தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டிருந்த நயன்தாரா, தற்போது மகன்கள் பிறந்தபோது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் ஒரு குழந்தையையும், நயன்தாரா ஒரு குழந்தையையும் கையில் ஏந்தியபடி ரொமாண்டிக் போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணுபடப்போகுது சுத்திப்போடுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
nayanthara and vignesh shivan kids uyir, ulag
அதோடு இந்த பதிவில் விக்னேஷ் சிவன், ஜெயிலர் படத்திற்காக எழுதிய ரத்தமாரே பாடலையும் பின்னணியில் ஒலிக்க விட்டுள்ளார் நயன். இந்த பாடலை தன் மகன்களுக்காக தான் எழுதி இருந்தார் விக்னேஷ் சிவன். மகன்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலில் உயிர் மற்றும் உலகு என தன் மகன்களின் பெயரையும் பாடல் வரிகளில் சேர்த்திருப்பார் விக்னேஷ் சிவன்.
இதையும் படியுங்கள்... ரத்தமாரே... ரத்தமாரே! பொறுப்புள்ள டாடியாக... மகன்களுடன் கொஞ்சி விளையாடிய விக்கி - வைரலாகும் போட்டோஸ்