- Home
- Gallery
- வடிவேலு காமெடிக்கு இவ்வளவு பவரா... கோமாவில் இருந்து மீண்ட சிறுமி; தற்கொலை முடிவை கைவிட்ட பெண்! ஆச்சர்ய தகவல்
வடிவேலு காமெடிக்கு இவ்வளவு பவரா... கோமாவில் இருந்து மீண்ட சிறுமி; தற்கொலை முடிவை கைவிட்ட பெண்! ஆச்சர்ய தகவல்
நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னுடைய காமெடியால் கோமா நிலையில் இருந்த சிறுமி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியதாக கூறி இருக்கிறார்.

vadivelu
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்கிற பழமொழி உண்டு. அதற்கு ஏற்றார் போல் நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியை பார்த்து கோமா நிலையில் இருந்த சிறுமி ஒருவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறாராம். அதுமட்டுமின்றி தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவர் எதர்ச்சியாக வடிவேலு காமெடி பார்த்து அந்த முடிவை கைவிட்ட சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.
Vaigaipuyal Vadivelu
சமீபத்தில் செஃப் வெங்கடேஷ் பட் நடத்திய நேர்காணலில் தான் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார் வடிவேலு. அதன்படி 11 வயது சிறுமி ஒருவர் கோமாவில் இருந்தபோது டாக்டர் அவரது பெற்றோரிடம் இந்த பெண்ணுக்கு என்ன ரொம்ப புடிக்கும் என கேட்டிருக்கிறார். உடனே அவளது பெற்றோர், தங்கள் மகள் வடிவேலு காமெடி என்றால் விரும்பி பார்ப்பால் என கூறி இருக்கின்றனர்.
Vadivelu Comedy
உடனே அந்த காமெடி காட்சிகளை போட்டுக்காட்ட அறிவுறுத்தி இருக்கிறார் மருத்துவர். பின்னர் வடிவேலுவின் காமெடி காட்சிகளை அவரது பெற்றோர் போட்டுக் காட்டி இருக்கின்றனர். அந்த காமெடி காட்சிகளை பார்த்ததும் அந்த குழந்தை கோமாவில் இருந்து மீண்டு வந்துவிட்டதாம். கோமாவில் இருந்து மீண்டு வந்த பின்னர் வடிவேலுவை நேரில் பார்த்து நன்றியும் தெரிவித்து உள்ளனர் அந்த குழந்தையின் பெற்றோர். இந்த சம்பவத்தை கூறி இதைவிட வேறு என்ன வேண்டும் என பூரிப்படைந்துள்ளார் வடிவேலு.
இதையும் படியுங்கள்... கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கு... தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த தரமான பதிலடி
Comedy actor Vadivelu
அதேபோல் அவர் பகிர்ந்த மற்றொரு சம்பவத்தில், தேனியில் ஒரு பெண், தனது கணவர் தன்னை திட்டிவிட்டார் என விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்று இருக்கிறது. அப்போது அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தால், தூக்கிட கொண்டெ சென்ற கயிரை கையில் சுருட்டி வைத்து கொண்டு டிவி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாராம் அந்த பெண்.
Vadivelu Interview
பின்னர் போலீஸ் வந்து என்ன ஆச்சு என அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சாகலாம்னு பார்த்தேன், இந்த வடிவேலு வந்து கெடுத்துவிட்டார் என கூறினாராம். ஏனெனில், அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ய போகும்போது டிவியில் வடிவேலு காமெடி ஓடிக்கொண்டிருந்ததாம். அதைப்பார்த்ததும் அவர் தற்கொலை முடிவை கைவிட்டு இருக்கிறார்.
Vadivelu comedy cures coma
பின்னர் அந்த போலீஸ் அதிகாரி வடிவேலுவின் போன் நம்பரை வாங்கி போன் செய்து நடந்ததை கூறி இருக்கிறார். பின்னர் அந்த பெண்ணிடமும் பேசி இருக்கிறார் வடிவேலு, அப்போது அந்த பெண், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செத்துருப்பேன் சார், நீங்க தான் வந்து காப்பாத்திட்டீங்க என சிரித்துக்கொண்டே கூறி இருக்கிறாராம். பின்னர் வடிவேலு, இதுபோன்று இனி செய்யக்கூடாது என அறிவுறுத்தினாராம்.
இதையும் படியுங்கள்... அப்பா, அம்மாவுக்கு அப்புறம் ராஜ்கிரண் தான்... சினிமாவில் திருப்புமுனை தந்த கடவுள் கமல் - வடிவேலு நெகிழ்ச்சி