- Home
- Gallery
- விண்ணை முட்டும் கோவிந்தா கோவிந்தா கோஷம்! திருவேங்கடமுடையான் புது பஜனை கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது!
விண்ணை முட்டும் கோவிந்தா கோவிந்தா கோஷம்! திருவேங்கடமுடையான் புது பஜனை கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது!
நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கட முடையான் கோயில் (பஜனை கோவில்) புணரமைக்கப்பட்டு ஸ்ரீருக்மணி, சத்திய பாமா சமேத ஸ்ரீவேணுகோபால் கிருஷ்ணனுக்கு கும்பாபிஷேகம் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tiruvengadamudaiyan Temple
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கடமுடையான் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலை புரணரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வாஸ்து பூஜை, கலச பிரதிஷ்டை நடைபெற்றது.
Tiruvengadamudaiyan Temple Kumbabhishekam
மாலை 4.00 மணியளவில் பகவத் பிரார்த்தனை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹுதிக்குப் பின்னர் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8.00 மணிக்கு தேஜஸ்வி பட்டாச்சாரியார் தலைமையில் கிருஷ்ணகான பஜனை நடைபெற்றது.
Kumbabhishekam
தொடர்ந்து இன்று காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பிரதான கலச பூஜை புறப்பாடும் , திண்டிவனம் நம்மாழ்வார் சபைத் தலைவர் வீரா. வெங்கடேசன் பாகவதர் தலைமையில் திவ்ய பிரபந்த பஜனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணியளவில் மூலவர் ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
Pudu Pajanai kovil Kumbabhishekam
பின்னர் மஹா தீபாராதனையை அடுத்து பக்தர்களுக்கு இன்று முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 8.00 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற உள்ளது.
Excellent Hicare pvt ltd
இந்நிகழ்வில் சுற்றுப்புற கிராம மக்கள், பாகவதர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக Excellent Hicare pvt ltd M.D திருப்பதி M.com கலந்து கொண்டார்.