- Home
- Gallery
- School College Holiday:செம்ம ஹாப்பி நியூஸ்! மார்ச் 21ம் தேதி பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியானது!
School College Holiday:செம்ம ஹாப்பி நியூஸ்! மார்ச் 21ம் தேதி பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியானது!
உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tiruvarur temple azhi therottam
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும்.
Tiruvarur District Collector Charusree
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஆழித் தேரோட்டத் திருவிழாவையொட்டி முன்னிட்டு மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. ஆனால், அன்றைய தினம் நடைபெற உள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
School College
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024 மார்ச் 5வது சனிக்கிழமை (30.03.2024) அன்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
Government employee
திருவாரூர் மாவட்டத்திற்கு ஆழித் தேரோட்டத் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.