Sukra Peyarchi 2022 Today: மே 23ஆம் தேதி சுக்கிரன் ராசி மாற்றம்.....இவங்களுக்கு வாழ்வில் தோல்வியே இல்லையாம்..?
Sukra Peyarchi palangal 2022: ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி முதல், ஏற்கனவே குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். எந்தெந்த ராசிகள் சிறப்பு பலன்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
shukra
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி முதல், ஏற்கனவே குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால், சில ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், சில ராசிகளுக்கு அதிஷ்ட யோகம் உண்டாகும். எந்தெந்த ராசிகள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
shukra
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும், சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி உங்களை திக்கு முக்காட செய்யும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பல வழிகளிலும் பணம் சம்பாதிப்பார்கள்.
shukra
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் துவங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் பதில் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
shukra
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். எதிலும், பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமை வலுவாகும்.
shukra 01
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். முன்கோபம் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தை இனிமை தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பது நல்லது.
Capricorn
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் சஞ்சாரம் தடைப்பட்ட சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.