Sevvai Peyarchi: செவ்வாயின் அருளால் இந்த ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்..ஜூலை 4 வரை வாழ்வில் செல்வம் பெருகும்..
Sevvai Peyarchi 2022 Palangal: ஜூன் முதல் வாரத்தில் இரண்டு கிரகங்களின் ராசி மாற்றங்களுடன், செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிடத்தின் பார்வையில், ஜூன் 2022 இல் கிரகங்களின் நிலையில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்றதன் தாக்கம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசியினருக்கு நல்ல பலன்களையும் சிலருக்கு தீய பலன்களையும் ஏற்படுத்தும். அதன்படி, வரப்போகும் ஜூன் முதல் வாரத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன. ஜூன் 3 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசிக்கு சென்றதுபோலவே, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது.
Akshaya Tritiya 2022 Horoscope
இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், ஜூலை முதல் வாரம் அதாவது ஜூலை 4 வரை இதன் உடனடித் தாக்கம் எதிரொலிக்கும். இந்த இரண்டு ராசி மாற்றங்களுடன் , வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றின் காரக கிரகமாக செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து எந்தெந்த ராசிகளுக்கு அருள் மழையை பொழிய போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூலை 4 வரை செவ்வாயின் அருளால் கணவன் மனைவி இடையே உறவுகள் மேம்படும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் லாபம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிலும் வெற்றி நிச்சயம்.
சிம்மம்:
ஜூலை 4 வரை செவ்வாயின் அருளால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். வெற்றி, முன்னேற்றத்தை கொடுக்கும். இருப்பினும், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் அதிக புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியான இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். திருமண யோகம் கைகூடும்.
துலாம்:
ஜூலை 4 வரை செவ்வாயின் அருளால், துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு உறவுகள் மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் சாதக பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிலும் வெற்றி நிச்சயம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் லாபம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். உறவு மேம்படும்.