Sukran peyarchi: மேஷ ராசியில் ராகு, சுக்கிரன் கூட்டணி...இந்த ராசிக்கு ஜாக்பார்ட் யோகம்..திடீர் பண மழை பொழியும்
Sukran Peyarchi 2022 Palangal: மே 23 அன்று முதல் ராகுவும் சுக்கிரன் மேஷ ராசியில் கூட்டணி அமைத்துள்ளதால், இதன் தாக்கம் சுப மற்றும் அசுப பலன்களை தரும். அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
shukra rashi parivartan
ராகுவும் சுக்கிரன் கூட்டணி:
ஜோதிட சாஸ்திரப்படி, நிழல் கிரகமானராகு கிரகம் ஏப்ரல் 12ஆம் தேதி ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியுள்ளார். சுமார் 18 1/2 ஆண்டுகளுக்கு பிறகு ராகு மேஷ ராசிக்கு வந்துள்ளார். அதேபோன்று, மே 23 அன்று, ஆடம்பர வாழ்க்கையின் காரணியாக சுக்கிரன் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் பிரவேசித்துள்ளார்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, மேஷ ராசியில் சுக்கிரனும் ராகுவும் இணைந்தால் விரோத யோகம் உண்டாகும். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டும். இருப்பினும், சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும் அப்படி யாருக்கு என்னென்னெ பலன்களை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
astrology
ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு-சுக்கிரன் கூட்டணி இரண்டாம் வீட்டில் நடக்கும். இதனால், உங்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். உங்கள் நிதி நிலை மேம்படும்.தொழிலில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எளிதில் முடிவடையும். சுப செய்திகள் வந்து சேரும். தொட்டது துலங்கும் வாழ்வில் வெற்றி நிச்சயம் .
Libra Zodiac
துலாம்:
உங்கள் ராசிக்கு ராகு-சுக்கிரன் கூட்டணி ஏழாம் வீட்டில் நுழைவதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் பிறக்கும். இருப்பினும், இது உங்கள் திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும். திருமண தடை நீங்கும். உறவில் பதற்றம் உண்டாகும். நிதி நிலைமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அதிக ஒற்றுமை இருக்கும். இல்லறம் சிறக்கும்.
Aquarius
கும்பம்:
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு - சுக்கிரன் கூட்டணி பதினொன்றாம் வீட்டில் நடக்கும். இந்த நேரத்தில் உங்கள் எண்ணங்கள் வெற்றியடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு நீங்கும். இருப்பினும், கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
Leo Zodiac
சிம்மம்:
சிம்ம ராசிக்கு ராகு-சுக்கிரன் கூட்டணி ஐந்தாம் வீட்டில் நுழைவதால், இது உங்கள் காதல் வாழ்க்கைக்கு சிறப்பாக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி பொங்கும்.இருப்பினும், இந்த நேரத்தில் பொறுமை அவசியம். இல்லையெனில் தேவையில்லாத விளைவுகளை சந்திக்க நேரிடும்.