Sukran Peyarchi: சுக்கிரன் மிதுன ராசியில் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், ஒளி பிறக்கும்
Sukran Peyarchi 2022 Palangal: ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால், ஜூலை மாதம் முழுவதும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
shukra 01
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை மாதம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். ஜூலை மாதத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் பலன் அடைவார்கள். மேலும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஏனெனில், ஜூலை மாதம் பல முக்கிய கிரகங்கள் தனது ராசியை மாற்றப் போகின்றன. இதன் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். இதில், குறிப்பாக ஜூலை 13ஆம் தேதி ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால், எந்தெந்த ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும். உங்கள் வேலையில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் ஏற்படலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் ராசி மாற்றம், தொழில் வாழ்க்கைக்கு சாதகமான காலத்தை கொண்டு வருகிறது. புதிய வேலை வாய்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். நீங்கள் வணிகத்தில் பெரிய முதலீடு செய்ய விரும்பினால், உங்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
இந்த காலகட்டத்தில் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதான சூழல் உருவாகி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு அரசுவேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். போட்டித் தேர்வில் வெற்றி நிச்சயம்.
சிம்மம்:
ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் ராசி மாற்றம், சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷடமான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் பண வரவு அதிகம் இருக்கும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகள் மும்முரமாக நடக்கத் தொடங்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் வரும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமான முடிவு இருக்கும். தொழிலில் லாபம் கூடும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.