Sani Peyarchi : ஜூலை 3ம் தேதி சனிபகவான் நேரடி அருள் பெறும் ராசிகள்...இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி...
Sani Peyarchi 2022 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான், அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் ஆக்கும் வல்லமை பெற்றவர். அப்படியாக குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான யோகம் உண்டு. அவை, எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
sani peyarchi 2022
சனி பெயர்ச்சி 2022:
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒருவரின் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர். சனி பகவானின் ஆசீர்வாதம் இருந்தால், ஒரு நபரின் வாழ்க்கை அனைத்து வகையான மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் நிறைந்திருக்கும். நிம்மதியான வாழ்க்கையை பெறலாம். மறுபுறம், சனியின் சனி தோஷம், சனி மகாதசை, ஏழரை நாட்டு சனி ஒருவரின் வாழ்க்கையை சீரழிக்க நேரிடும்.
sani peyarchi 2022
ஜூன் 3 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசிக்கு சென்றதுபோலவே, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது. இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், ஜூலை முதல் வாரம் வரை இதன் உடனடித் தாக்கம் எதிரொலிக்கும். இந்த இரண்டு ராசி மாற்றங்களுடன் செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
sani peyarchi 2022
மேஷம்:
சனி மற்றும் புதன் பெயர்ச்சி ஜூலை முதல் வாரம் வரை மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும். இவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வாழ்க்கை பிரகாசிக்கும். புதிய வீடு-வாகனம் வாங்கும்யோகம் உருவாகும். புதிய வேலையைத் தொடங்க இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.
sani peyarchi 2022
துலாம்:
சனி மற்றும் புதன் பெயர்ச்சி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, உங்களுக்கு எங்கிருந்தோ திடீரென பணம் கிடைக்கும். சனியின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும். சனி உங்களுக்கு அபரிமிதமான செல்வத்தை அளிப்பவர். சனியின் அருள் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். பண வரத்து அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணம் திரும்ப வரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணத்தை சேமிக்கும் யோகம் உண்டு.
sani peyarchi 2022
மிதுனம்:
சனி மற்றும் புதன் பெயர்ச்சி மிதுனத்திற்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. லாபம் பெருகும், வியாபாரம் விரிவடையும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதான சூழல் உருவாகி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.