Sani Peyarchi: சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி...கோடி நன்மை பெறப்போகும் ராசிகள்...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்
Sani Peyarchi 2022 Palangal: ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமானவர். சனி பகவான் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கின்றார். சனியின் பெயர்ச்சியால் யாருக்கு என்னென்னெ பலன்கள் தருகிறார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Sani Peyarchi 2022
சனி பெயர்ச்சி 2022:
சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், 2024 வரை, குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். இதற்கிடையில், சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஜனவரி 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும்
sani peyarchi 2022
இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனியின் ஆசிர்வாதம் கிடைக்கும். சிலர் சனியின் வக்ர நிலையை அனுபவிக்க வேண்டி இருக்கும். அப்படியாக, சனியில் ஆபத்தில் இருந்து தப்பித்து பிழைக்கும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
sani peyarchi 2022
மேஷம்:
இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். ஏற்கனவே நல்ல வேலையில்இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலை துவங்கும் எண்ணம் உள்ளவர்கள் வெற்றிகள் நிச்சயம். வியாபாரத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
sani peyarchi 2022
கன்னி:
கர்ம வீட்டில் சனியின் சஞ்சாரம் தொழிலில் வெற்றியைத் தரும். தொழில்-வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, மரியாதை, கௌரவம் என அனைத்தும் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் நிச்சயம். வெற்றி உங்களை தேடி வரும். புது முயற்சிகள் வெற்றியை தரும்.
sani peyarchi 2022
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். உங்கள் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள், உறவினர்களிடமிருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும்.