Suriyan Peyarchi 2022: இன்று சூரியனின் பெயர்ச்சி...இந்த மூன்று ராசிகளுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Suriyan Peyarchi 2022 Palangal: ஜூன் 15ஆம் தேதி அதாவது இன்று கிரகங்களின் அரசனான சூரியன் மதியம் 12:4 மணிக்கு, புதன் அதிபதியாக உள்ள மிதுன ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 15ஆம் தேதி அதாவது இன்று கிரகங்களின் அரசனான சூரியன் மதியம் 12:4 மணிக்கு, கன்னி லக்னத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியிலிருந்து விலகி, புதன் அதிபதியாக உள்ள மிதுன ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இங்கு அவர் ஜூலை 16 இரவு வரை இருப்பார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ,சூரியன் தைரியம், வெற்றி, தன்னம்பிக்கை, கௌரவம், ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பவர். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும்போது, நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும். எனவே, சூரியனின் சூரியன் இந்த ராசி மாற்றம்எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்:
சூரியனின் சஞ்சாரம் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். திடீர் பண வரவு இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
Astrology tips
சிம்மம்:
சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியானவர். சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். அவர்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வாழ்வில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு, மிதுன ராசியில் சூரியனின் பிரவேசம் பணியிடத்தில் பலமான பலன்களைத் தரும். வியாபாரத்தில் நல்ல விருத்தி ஏற்படும். இருப்பினும், இந்த காலத்தில் ஏமாற்றங்கள் உங்களை படுத்தும். படைப்பாற்றல் தொடர்பான வேலைகளில் நல்ல பணமும் புகழும் பெறுவீர்கள். நோய்களில் இருந்து விடுபடலாம். போட்டி தேர்வுகளில் வெற்றி உறுதி.