தலைவர் 171.. LCUவில் வருகின்றதா? கதையை கேட்டவுடன் ரஜினிகாந்த் சொன்னதென்ன? - மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்!
தனது ஜெயிலர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 170 ஆவது திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Thalaivar 170
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் சூப்பர் ஹிட் நடிகராக வளம் வந்து கொண்டு இருப்பவர்தான் ரஜினிகாந்த். அன்று தொடங்கி இன்று வரை அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் ஒரு வசீகரம் சூப்பர் ஸ்டாரிடம் உண்டு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி வருகின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது தனது 170-வது திரைப்படத்திற்காக பிரபல இயக்குனர் ஞானவேல் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
அநியாயம் பண்றீங்க... ஸ்டிரைக் பண்ணிய போட்டியாளர்களை பொளந்துகட்டிய கமல்ஹாசன்
Thalaivar 170 Cast
கேரளாவில் ஏற்கனவே இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது திருநெல்வேலியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஞானவேல் படத்தை முடித்த பிறகு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கிறார். இது அவருடைய 171 வது திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Lokesh and Super Star
இந்நிலையில் அந்த திரைப்படம் குறித்து மனம் திறந்து உள்ள லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 திரைப்படம் அவருடைய லோக்கி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் உள்ளே வருகிறதா என்று கேட்டதற்கு, பளிச்சென்று இந்த திரைப்படம் LCU விற்குள் வரவில்லை என்று ஆணித்தரமாக கூறினார். மேலும் இந்த திரைப்படம் தனது இயல்பான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாணியில் எடுக்கப்பட உள்ள படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Lokesh Kanagaraj
இன்ப அதிர்ச்சி தரும் பல சூப்பர் ஹிட் நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள் என்றும், அது குறித்த தகவல்கள் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியதும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் கூறிய பொழுது, மெய்மறந்து கதையை கேட்ட ரஜினிகாந்த் அவர்கள், இறுதியில் சட்டென்று எழுந்து லோகேஷ் அருகில் வந்து "கலக்கிட்ட கண்ணா" என்று கூறி வாழ்த்து தெரிவித்தது தன்னால் மறக்க முடியாத தருணம் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.