- Home
- Gallery
- யாரு எவங்க எல்லாம் பாக்காதீங்க! நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்க! கோர்ட் அதிரடி!
யாரு எவங்க எல்லாம் பாக்காதீங்க! நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்க! கோர்ட் அதிரடி!
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Number Plates
சென்னை மாநகரில் இயக்கப்படும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
chennai high court
அதில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் மதச் சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக அரசுப் பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் முழுவதுமாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
Number Plates
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
Chennai Traffic Police
மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கார் கண்ணாடிகளில் கருப்பு நிறத்தில் கூலிங் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.