MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anna Serial: கனவோடு வந்த சூடாமணிக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial: கனவோடு வந்த சூடாமணிக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி வீட்டிற்கு வர கனி கதவை சாற்றி கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

1 Min read
manimegalai a
Published : Jul 12 2024, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது, கனி ரத்னாவுக்கு போன் செய்து யாரோ ஒருத்தவங்க புதுசா வந்திருக்காங்க என்று சொல்ல கன்னிக்குமாரி காரர்களாக இருப்பாங்க என்று நினைத்து நீ கதவை சாத்திக்கிட்டு உள்ளே இரு நாங்க வந்துடுறோம் என்று சொல்கிறாள். 

25

அதை தொடர்ந்து ரத்னா பரணிக்கு போன் செய்து விஷயத்தை அவளும் நீங்க செய்தது தான் சரி என்று சொல்கிறாள். பிறகு பரணி ஷண்முகத்திடம் உடனே கிளம்பி வா என்று கூப்பிட ஷண்முகமும் கிளம்பி வருகிறான். 

அபிராமியை காப்பாற்ற தீபாவுக்கு கிடைத்த வழி! தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட ரம்யா? கார்த்திகை தீபம் அப்டேட்!

35

இங்கே வீராவும் ரத்னாவும் வீட்டிற்கு வந்து விட, சூடாமணி நான் உங்க அம்மா என்று சொல்ல வர நீங்க எங்க அம்மாவுக்கு தெரிந்தவங்களா.. எங்க அம்மாவுக்கு தெரிந்தவங்க கூட எங்களுக்கு வேண்டாம், நீங்க இங்க இருந்து போய்டுங்க என்று கோபப்பட கனவோடு வந்த சூடாமணி கண் கலங்கி நிற்கிறாள். 

45

அதன் பிறகு சூடாமணி அங்கிருந்து கிளம்பி செல்ல மறுபக்கம் பரணியுடன் வீட்டிற்கு கிளம்பும் ஷண்முகத்திற்கு வார்டன் போன் செய்து சூடாமணி பரோலில் வந்திருக்காங்க.. வீட்டிற்கு வந்து சேர்ந்திட்டாங்களா என்று கேட்டதும் வந்ததும் அம்மா தான் என்ற விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வருகிறது. 

Indian 2: 28 வருட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான 'இந்தியன் 2 '! வெறிச்சோடிய தியேட்டர்கள்? அரசியல் தான் காரணமா?

55

மகள்கள் சொன்ன வார்த்தையால் இனிமே இங்க இருக்க கூடாது என்று முடிவெடுக்கும் அவள் ஊரை விட்டு வெளியேற, வீட்டிற்கு வந்த ஷண்முகத்திடம் தங்கைகள் அவங்களை திட்டி அனுப்பி விட்டதாக சொல்ல சண்முகமும், பரணியும், சூடாமணியை தேடி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved