- Home
- Gallery
- சூடாமணி உடன் காத்துவாக்குல காதல் செய்யும் வைகுண்டம்.. பல்பு வாங்கிய சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
சூடாமணி உடன் காத்துவாக்குல காதல் செய்யும் வைகுண்டம்.. பல்பு வாங்கிய சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் வைகுண்டம், சூடாமணி இடையேயான ரொமான்ஸை பார்த்து குடும்பத்தினர் என்ன செய்தார்கள் என்பதை பார்க்கலாம்.

Anna Serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி பரணிக்கு பதிலாக எல்லாருக்கும் உணவு சமைத்து வைத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது கனி, வீரா ஆகியோர் எங்களுக்கு ஹோம் ஒர்க் இருக்கு என்று சொல்லி அதை செய்ய ஆரம்பிக்க, ரத்னாவும் ஸ்கூல் வேலைகளை கவனித்துக்கொள்கிறாள்.

Zee Tamil Anna Serial
சூடாமணி சாப்பாடு போட்டு கனி, வீராவுக்கு ஊட்டி விடுவதோடு ரத்னாவுக்கும் ஊட்ட போக, அவள் நான் என்ன சின்ன குழந்தையா என்று கேட்க, சூடாமணி நீங்க எனக்கு குழந்தைகள் தான் என்று சொல்லி ஊட்டி விடுகிறாள். இதைப் பார்த்து ரசிக்கும் வைகுண்டம், கண் ஜாடையில் தனக்கும் ஊட்டி விடுமாறு கேட்க, சூடாமணியும் யாருக்கும் தெரியாமல் ஊட்டிவிடுமிறார். கணக்கு பார்த்துக் கொண்டிருந்த சண்முகமும் இதை பார்த்து ஷர்க்காகி, இங்க என்ன நடந்துச்சு என்று கேட்க, வைகுண்டம் ஒன்னும் நடக்கல என்று மழுப்புகிறார்.
இதையும் படியுங்கள்... Youtuber Irfan : பெண் குழந்தை பிறந்தது... அப்பா ஆன குஷியில் யூடியூபர் இர்பான் - குவியும் வாழ்த்து
Anna Serial Update
வெட்டுக்கிளி இங்க நடந்ததை நீ பார்க்கல அப்படி தான என்று கேட்டு, நீயெல்லாம் ஒரு பிரெசிடெண்ட் என்று சண்முகத்தை திட்டுகிறான், மறுபக்கம் முத்துப்பாண்டி வேலைக்கு கிளம்ப, பாக்கியத்துக்கு பதிலாக இசக்கி பூஜை செய்து ஆரத்தி தட்டை கொண்டு வந்து காட்ட, அம்மா எங்க என்று முத்துப்பாண்டி கேட்க, பாக்கியம் நான் பண்ணாலும், அவ பண்ணாலும் ஒன்னு தான் என்று சொல்லுகிறாள். இதைக் கவனித்த சௌந்தரபாண்டி இவங்களை ஒன்னு சேர விட கூடாது என்று பிளான் போடுகிறார்.
Anna serial Today Episode
கறி எடுத்து வந்து கொடுத்த சிவபாலனிடம், இன்னைக்கு நான் கறி சாப்பிட மாட்டேனே என்று சௌந்தரபாண்டி சொல்ல, அது உங்களுக்கு இல்ல என்று அவன் பல்பு கொடுக்கிறான். பின்னர் சமைத்து முடித்த பாக்கியம், சிவபாலனிடம் அதைக் கொடுத்து அனுப்ப, சௌந்தரபாண்டி நீ கிரிக்கெட் விளையாட போகணும்னு சொன்னேல.. நீ போ, பரணிக்கு நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்று கேட்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... KGF பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கூட்டணி வைக்கப்போகும் அஜித்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!